தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தொழில் வளர்ச்சியில் முதலிடம் ... கருணாநிதி பெருமிதம்

சென்னை:

Karunanidhiதொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது முதல்வர் கருணாநிதிதெரிவித்தார்.

கம்பெனி சட்ட வாரியத்தின் கூடுதல் முதன்மை பெஞ்சை அவர் சென்னையில்சனிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளது. மாநிலஅரசின் அயராத உழைப்பால்தான் இந்த பெருமை தமிழகத்துக்குக்கிடைத்துள்ளது.வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு அதிக முதலீடுகிடைத்துள்ளது.

வெளிநாடுகளின் முதலீடு காரணமாக தென் இந்தியாவில் நிறைய கம்பெனிகள்உருவாகியுள்ளன. தென் இந்திய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட 1.2 லட்சம்கம்பெனிகளில் 49 ஆயிரம் கம்பெனிகள் தமிழகத்தில் செயல்படுகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.

அதிக கம்பெனிகள் செயல்படுவதால் கம்பெனி சட்டவாரியத்தில் வழக்குகள்அதிகரிப்பது இயல்பாகும். ஆகவே இதற்குத் தீர்வு காண வசதியாக ஆற்றல் வாய்ந்தநடைமுறை அவசியமாகிறது.

பங்குதாரர்கள் தொடர்பான பிரச்சினை, கம்பெனிகளின் தவறான நிர்வாகம்தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்டவை டெல்லியில் உள்ள கம்பெனிசட்டவாரியத்தின் முதன்மை பெஞ்சின் முன் விசாரணைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. இதனால் காலதாமதமும், அதிக செலவும் ஏற்படுகிறது.

இதையடுத்து தென் இந்தியாவில் உள்ள கம்பெனிகள், கம்பெனி சட்டவாரியத்தின்கூடுதல் முதன்மை பெஞ்ச் ஒன்றைத் தமிழகத்தில் ஏற்படுத்தவேண்டும் என்று கம்பெனிசட்டவாரியத்துக்கு கோரிக்கை விடுத்தன.

இக் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இப்போது கம்பெனி சட்டவாரியத்தின் கூடுதல்முதன்மை பெஞ்ச் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+