தமிழகத்தில் இன்று
உழவர் சந்தை மூலம் இதுவரை ரூ. 46 கோடிக்கு காய்கள் விற்பனை
சென்னை:
தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள உழவர் சந்தைகள் மூலம் இதுவரை ரூ.46கோடிக்கு பொருட்கள் விற்பனை ஆகியுள்ளன என்று மாநில வருவாய்த் துறைஅமைச்சர் நாஞ்சில் கி. மனோகரன் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் புதிதாக ரூ.55 லட்சம் செலவில்கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை அவர் திறந்து வைத்துப்பேசியதாவது:ட
தமிழக மக்கள் நலனுக்காக தமிழக அரசு அயராது பாடுபட்டு வருகிறது. குறிப்பாகஉழவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான பல திட்டங்களை முதல்வர் கருணாநிதிநிறைவேற்றி வருகிறார். அதன்படி உழவர் சந்தைத் திட்டத்தைத் தமிழக அரசுநிறைவேற்றி வருகிறது.
இதுவரை தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள உழவர் சந்தைகள் மூலம் ரூ.46 கோடிமதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத் திட்டத்துக்கு இந்தியாமுழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
நல்வாழ்வுத் திட்டங்களால் மக்களுக்கு நேரடி பயன் கிடைக்கும் வகையில்பணியாற்றும்படி அனைத்து அரசு ஊழியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்நாஞ்சில் மனோகரன்.












Click it and Unblock the Notifications