400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
100 அமர்நாத் யாத்ரீகர்கள் சிறைபிடிப்பு
ஸ்ரீநகர்:
ஜம்முவில், நூற்றுக்கும் மேற்பட்ட அமர்நாத் யாத்ரீகர்களை அடையாளம் தெரியாததீவிரவாதிகள் பினைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
ஜம்முவில்,ரெஜென்சி சாலையிலுள்ள ஹரி சிங் உயர் நிலைப் பள்ளியில் இந்தயாத்ரீகர்கள் தங்கியிருந்தபோது அவர்களை தீவிரவாதிகள் சிறை பிடித்தனர்.பள்ளியில் எத்தனை யாத்ரீகர்கள் இருந்தனர் என்று தெரியவில்லை. இருப்பினும்100-க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்ததாகத் தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநில டி.ஜி.பி. குர்பச்சன் ஜகத் இதுகுறித்துக் கூறுகையில், அமர்நாத்யாத்ரீகர்கள் தங்க வைப்பதற்காக ஹரி சிங் உயர் நிலைப் பள்ளி ஒதுக்கப்பட்டிருந்தது.
தற்போது 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியில இருக்கலாம் என்று நம்புகிறோம். பலயாத்ரீகர்கள் அதிகாலையிலேயே பள்ளியிலிருந்து வெளியேறி விட்டதால்,தீவிரவாதிகள் பிடியிலிருந்து தப்பி விட்டனர்.
தீவிரவாதிகளின் பிடியில் சில அதிகாரிகளும் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.பள்ளியைச் சுற்றிலும் தற்போது ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படை வீரர்கள்சூழ்ந்துள்ளனர். அவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தற்போது துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications