400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
நாஞ்சில் மனோகரன் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
சென்னை:
தமிழக வருவாய்த் துறை அமைச்சரும், முக்கிய திமுக தலைவருமான நாஞ்சில் கி.மனோகரன் மறைவக்கு திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதிஇரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
இனிய இளவலே, எப்படித் தீரும் இந்தத் துயரம்? என வினவிடும் நிலையில் எம் கண்எதிரே வீழ்ந்து பட்டனையே, தாங்க முடியவில்லை. ஏங்கித்தவிக்கிறேன். துடித்தழும் உன் குடும்பத்தினருக்கும் தூய உடன்பிறப்புக்களுக்கும் ஆறுதல் சொல்லும் வகையற்று நிற்கின்றேன்.
ஒன்றா? இரண்டா? எத்தனை ஆண்டுக்காலம் நம் நிட்பு. இடையே எழுந்த
வேறுபாடுகள் கூட புகையாய் மறைந்ததே தவிர பகையாய் நிலைக்கவில்லையே.
ஏற்றுக் கொண்ட பெரும் பொறுப்பை எவ்வளவு கச்சிதமாக நிறைவேற்றி
என்னை மகிழ்வித்துக் கொண்டிருந்தாய்.
எமக்குத் துணையிருக்கத் தானே துணைப் பொதுச் செயலாளராக ஆக்கினோம். எம் நெஞ்சு புலம்பிடப் பிரிந்து விட்டாயே.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குக் கூட செல்லாமல் கழகத் தலைவரின் அனுமதி பெற்று இந்தச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன் என்று நீபேசியதை நேற்றுத்தான் மாலை ஏடுகளில் கண்டேன்.
போய் வருவதற்குத்தான் அனுமதி அளித்தேன் - வராமலே நீ போவதற்கு
அனுமதி அளிக்கவில்லையே?.
பரவாயில்லை. என் கண்ணீரைக் காண்பதற்கு உனக்கும் ஓர் ஆசை - அதை நிறைவேற்றிக் கொண்டாய் - என் இதயத்தில் என்றென்றும் வீற்றிருப்பாய்என்று கூறியிருந்தார் கருணாநிதி.