For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த வாரம்

By Staff
Google Oneindia Tamil News

அடிவாங்கிய ஆடிட்டரை சாட்சி சொல்ல அனுமதிக்கக்கூடாது-ஜெ

சென்னை:

என் சொத்து பற்றி வழக்கில் சாட்சி சொல்ல ஆடிட்டர் ராஜசேரனுக்கு அனுமதி வழங்கக்கூடாதுஎன்று அ.தி.மு.க .பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, தினகரன், இளவரசிஆகியோர் மீது முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ் வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் ஒரு சில சாட்சிகளிடம் மட்டும் விசாரணைநடைபெற வேண்டியுள்ளது. அவர்களில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின்முன்னாள் ஆடிட்டர் ராஜசேகரன் ஆகியோரும் அடங்குவர்.

ஆகஸ்ட் 3-ம் தேதி சாட்சி சொல்ல வரும்படி இருவருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் சாட்சி சொல்ல ஆடிட்டர் ராஜசேகரனை அனுமதிக்கக்கூடாது என்றுகோரி ஜெயலலிதாவும், சசிகலாவும் தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

மனு விவரம்:

சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ் விதிமுறைகளின்படி ஒரு ஆடிட்டர் தன் வாடிக்கையாளருக்கு சமர்ப்பித்தஅறிக்கையை அந்த வாடிக்கையாளரின் சம்மதம் இல்லாமல் வெளியிடுவது குற்றமாகும்.

அத்தகைய குற்றத்தைச் செய்த ஆடிட்டர் ராஜசேகரனை சாட்சியம் அளிக்க அனுமதிக்கக்கூடாது என்றுமனுவில் ஜெயலலிதாவும், சசிகலாவும் கூறியுள்ளனர்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

சுப்பிரமணியம் சுவாமி வெளியூரில் இருப்பதால் வியாழக்கிழமை அவர் சாட்சியம் அளிக்கமாட்டார்என்றும் ஆகஸ்ட் 10-ம் தேதி அவர் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியம் அளிப்பார் என்றும்கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X