வன்முறை வரலாம் ... இலங்கை அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

வீரப்பனின் ஆட்களை தொடர்பு கொண்டார் நக்கீரன் கோபால்

சென்னை:

நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் புதன்கிழமை வீரப்பனின் கூட்டாளியைத் தொடர்பு கொண்டார்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன வீரப்பன் கடத்திச் சென்று காட்டுக்குள் வைத்துள்ளான். அவரைவீரப்பனிடமிருந்து விடுவிக்க கோபாலின் உதவியை கர்நாடக-தமிழக அரசுகள் நாடியுள்ளன.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை கோபால் காட்டுக்குப் புறப்பட்டார். சத்தியமங்கலம் காட்டுக்குள்சென்ற அவர் வீரப்பனின் கூட்டாளிகளை சந்திக்க காத்திருந்தார்.

புதன்கிழமை காலையில் அவரை வீரப்பனின் கூட்டாளிகள் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது. இந்தசெய்தி இரவில் தான் வெளியானது.

வீரப்பனின் ஆட்கள் அவரை வீரப்பன் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் வீரப்பன்தனது கோரிக்கைகளை சொல்லி அனுப்பலாம் எனத் தெரிகிறது.

இந்த கோரிக்கைகளுடன் கோபால் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்கலாம் என்று தெரிகிறது.இந்த கோரிக்கைகள் குறித்த தமிழக, கர்நாடக அரசுகளின் பதில்கள் வீரப்பனுக்கு கோபால்மூலமே மீண்டும் தெரிவிக்கப்படும்.

இதற்கு குறைந்தபட்சம் 4 நாட்கள் பிடிக்கும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+