இந்த வாரம்
ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பனுக்கு மகள் கோரிக்கை
கோவை:
கன்னட நடிகர் ராஜ்குமாரையும், அவருடன் கடத்திச் செல்லப்பட்டவர்களையும் விடுவிக்க வேண்டும் என சந்தன வீரப்பனுக்கு அவரது மகள் வித்யாராணிகோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் மகள் வித்யாராணி ஆகியோர் வசித்து வருகின்றனர். மேட்டூரில்உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வரும் வித்யாராணி கூறியதாவது:
எனது அப்பா, கன்னட நடிகர் மற்றும் அவருடன் அழைத்துச் சென்றவர்களை ஒன்றும் செய்து விட மாட்டார். அவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்பிவைப்பார். ஏற்கனவே கடத்திச் சென்றவர்களை ஒன்றும் செய்து விடவில்லை. மேலும், இந்த நடிகரை விடுவிக்க வேண்டும் என எனது தந்தையைக்கேட்டுக் கொள்கிறேன்.
கர்நாடகா மற்றும் தமிழக அரசு பொது மன்னிப்பு வழங்கி, எனது தந்தையை எங்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறுகையில், கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு எந்த தீங்கும் நேராது என்றார்.












Click it and Unblock the Notifications