இந்த வாரம்
இலங்கை அரசியல் சட்ட மசோதா 3-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் கிடைக்க வழி செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா தாக்கல்செய்யப்படுகிறது.
மசோதா குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் ஆராய்ந்து வருகின்றனர். புதன்கிழமை மாலைக்குள் மசோதா குறித்து அவர்கள் அரசுக்குஅறிக்கை அளிப்பார்கள். அதன் பின்னர் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.
ஆகஸ்ட் 24 ம் தேதி அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதற்குள் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யசந்திரிகா முடிவெடுத்திருந்தார். விரைவில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலுக்குப் பின் அடுத்த மூன்று மாதத்திற்குள் புதிய அரசு பதவியேற்கும். புதிய அரசுபதவியேற்ற பிறகு மசோதா மீதான விவாதம் நடக்கும். அப்போது நடக்கும் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேற்றப்படும்.
முன்னதாக அரசியல் சட்ட திருத்தம் குறித்து அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஐக்கிய தேசிய கட்சியைப்பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் சட்ட திருத்தமசோதா தாக்கல் செய்யப்பட்ட பினபு தான் தங்களது இறுதி நிலையைத் தெரிவிக்கும் என்று கூறியுள்ளது.
யு.என்.ஐ.