இந்த வாரம்
Subscribe to Oneindia Tamil
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு புரளி
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குண்டு வெடிக்கும் என்று வந்த மிரட்டலைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மதுரையில் உள்ளது புகழ் பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். இந்தகோவிலில் புதன் கிழமை காலை குண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்தது.இதையடுத்து கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கோவிலுள்ள ஐந்துநுழைவு வாயிலிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டது.
கோவிலின் கதவுகளில் மெட்டல் டிடெக்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளன.செவ்வாய்க்கிழமை மாலை முதல் கோவிலுக்கு வரும் அனைவரும் கோவில் நுழைவுவாயிலில் கடுமையான சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளேஅனுமதிக்கப்படுகின்றனர்.
சமீபத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமி கோவிலில் குண்டு வெடிக்கும் எனஒரு அனாமதேயக் கடிதம் வந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications