இந்த வாரம்
வீரப்பனுக்கு ராஜ்குமார் மனைவி ரேடியோ மூலம் வேண்டுகோள்
சென்னை:
என்னை உன் சகோதரியாக நினைத்து என கணவரை விடுதலை செய் என்று சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா ரேடியோமூலம் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் காஜனூர் கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்குவந்திருந்த ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் இரண்டுநாட்களுக்கு முன் கடத்திச் சென்றான்.
இதுவரை அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில், வீரப்பனைச் சந்திக்கஅவனது கோரிக்கைப்படி நக்கீரன் கோபால் அரசுத் தூதராக அவனைச் சந்திக்ககாட்டுக்குள் விரைந்துள்ளார்.
இந் நிலையில், ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, ரேடியோ மூலம் வீரப்பனுக்குவேண்டுகோள் விடுத்தார். தமிழில் அவர் பேசினார்.
நான் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா பேசுகிறேன். என்னை உன்
சகோதரியாக நினைத்துக் கொள். என் கணவருக்கு சரியான நேரத்தில் மருந்துகள்கொடு.
என் கணவரை விரைவில் அனுப்பி வைத்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.அவர்களுக்கு மூட்டு வலி உள்ளது. அதை நினைத்தாவது அவரை விடுதலை செய்யவேண்டும்.
கணவரை நீங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.எல்லோரையும் விரைவில் நீங்கள் விடுதலை செய்ய வேண்டும் என்றுஎதிர்பார்க்கிறோம் என்றார் பர்வதம்மா.
அவரைத் தொடர்ந்து ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர
ராஜ்குமார், புனித் ராஜ்குமார், சகோதரர் வரதப்பா ஆகியோர் பேசினர்.
ராஜ்குமாரின் உடல் நிலை பற்றியும், மருந்துகள் பற்றியும் அவர்கள் கூறினர்.
சென்னை, திருச்சி, கோவை, பெங்களூர், மைசூரில் உள்ள வானொலி நிலையங்கள்மூலம் இச் செய்தி ஒலிபரப்பப்பட்டது.