கோவை லாரி விபத்தில் 5 பெண்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அருகே லாரியும், டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்ஐந்து பெண்கள் இறந்தனர்.
ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்று விட்டு டெம்போவேனில் பெண்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். கோவை சூலூர் அருகே ஒரு லாரி,இந்த வேனுடன் மோதியது.
இந்த விபத்தில் கலங்கல் என்ற ஊரைச் சேர்ந்த பாப்பாத்தி (50), அமராவதி(38),காளியம்மாள் (48), பழனியம்மாள்(42) மற்றும் லட்சுமி (40) ஆகியோர் சம்பவஇடத்திலேயே இறந்தனர்.
வேனில் இருந்த 20 பேர் காயமடைந்தனர்.சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications