ஆகஸ்ட் 5-ல் அரசு ஊழியர்கள் மாநாடு
சென்னை:
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் 55-வது மாநில மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் சூரியமூர்த்தி கூறியதாவது:
ஒன்றியத்தின் 55-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 5-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது. இம் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி கலந்துகொள்கிறார்.
மாநாடு தொடங்குவதற்கு முன் மே தின பூங்காவிலிருந்து பேரணி நடைபெறும். பேரணியை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைக்கிறார். ஒன்றியத்தின்எழுச்சி தீபத்தை அமைச்சர் பன்னீர் செல்வம் ஏற்றி வைக்கிறார். பிற்பகல் 2 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெறும். 5மணிக்கு மாநாட்டு நிறைவு விழா நடைபெறும்.
நிறைவு விழாவில் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் சிவ.இளங்கோ உருவச் சிலையை சட்டப்பேரவை சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் திறந்துவைக்கிறார். மாநாட்டு மலரை முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.
விழாவில் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரை முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மாநாடு மற்றும் பேரணியில்சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் சூரிய மூர்த்தி.












Click it and Unblock the Notifications