For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆக.16 முதல் இன்ஜினியரிங் கவுன்சலிங்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2000-2001-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்குகிறதுஎன்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 26-ம் தேதியே கவுன்சலிங் தொடங்குவதாக இருந்தது. ஆனால், தகவல் தொழில் நுட்பப் பாடப் பிரிவில் கூடுதல் இடங்களை ஒதுக்கமத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அண்ணா பல்கலைக் கழகம் உள்ள தமிழகத்தில் உள்ள 106 பொறியியல் கல்வி நிலையங்கள் 12,722 இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளன. இது குறித்துஏ.ஐ.சி.டி.இ. கமிட்டிஆராய உள்ளது.

விண்ணப்பிக்கப்பட்டுள்ள இடங்களில் 6000 இடங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ள கமிட்டி அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமிட்டியின்இறுதி அறிக்கை ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும்.

மேற்கண்ட 6000 இடங்களைக் கணக்கில் கொள்ளாமல் திட்டமிட்டபடி ஒற்றைச் சாளர முறையில் கவுன்சலிங் நடைபெற்றிருக்கும் பட்சத்தில் மாணவர்இட ஒதுக்கீட்டில் பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கும்.

மேலும் திறமையான, தகுதியான மாணவர்கள், தகவல் தொழில்நுட்பக்கல்வியில் சேர இயலாமல் போயிருக்கும். இதைத் தவிர்க்கவே கவுன்சலிங் ஒத்தி வைக்கப்பட்டது.

மேற்கண்ட அனைத்தையும் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு ஒற்றைச் சாளர முறையில் ஆகஸ்ட் 16-ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது.

கவுன்சலிங் பற்றிய விரிவான, முழுமையான பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் விரைவில் அறிவிக்கும் என்று அரசு செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X