செருப்பு தயாரிப்பில் மோசடியா? இல்லை என்கிறது தமிழக அரசு
சென்னை:
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மதுரை பிரிவில் செருப்பு உற்பத்திப் பிரிவில் ரூ. 1.63 லட்சம் ஊழல்நடந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தவறு. ஊழல் ஏதும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக வியாழக்கிழமை அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மதுரையில் உள்ள செருப்பு தயாரிப்புப் பிரிவில் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது ரூ.1.63 லட்சம்அளவுக்கு ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி ஏதும் ஊழல்நடைபெறவில்லை.
தணிக்கையாளர்களும் ஊழலைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. காலணி தயாரிக்க அனுமதிக்கப்பட்டதற்குஅதிகமாக தோல் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆராயும்படி மட்டுமே தணிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, மதுரை மண்டல துணை இயக்குநரை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படிகோரப்பட்டது. அவரும் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையின்படி பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட ஆர்டர்களின்படி ரூ. 11.83 லட்சம் மதிப்புள்ளதோல் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதில் 200 ஜோடி காலணிகள் தயாரிக்க 420 சதுர அடி தோல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாரியத்தால்நிர்ணயிக்கப்பட்ட 430 சதுர அடிகள் அளவுக்குள்ளாகவே தோல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, கூடுதலாக தோல் பயன்படுத்தியாதால் ரூ.1.63 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகக் கணக்குகாட்டப்பட்டுள்ளதாக வெளியான பத்திரிக்கைச் செய்தி தவறானது என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications