ஜடேஜா வங்கி லாக்கரை குடைந்தெடுத்த வருமானவரித்துறை
டெல்லி:
கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா வங்கி லாக்கரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டஆவணங்களில் உள்ள விவரங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைநடத்தி வருகின்றனர்.
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக பலகிரிக்கெட் பிரபலங்கள் வீட்டில் சமீபத்தில் அதிரடி வருமான வரிச் சோதனை நடந்தது.ஜடேஜா மற்றும் முன்னாள் கேப்டன் அஸாருதீன் ஆகியோர் லண்டனில் இருந்ததால்அவர்களது வீடுகளில் மட்டும் வருமான வரிச் சோதனை நடைபெறவில்லை.
இந்த நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி இருவரும் லண்டனிலிருந்து இந்தியா திரும்பினர்.இதையடுத்து இருவரது வீடுகளிலும் வருமான வரிச் சோதனை நடந்தது. வீடுகளில்சோதனை நடத்திய நிலையில் ஜடேஜாவின் வங்கி லாக்கரை புதன்கிழமை வருமான வரித்துறையினர் திறந்து பார்த்து அதிலிருந்தவற்றைச் சோதனையிட்டனர்.
இதில் சில ஆவணங்களை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர். அதிலுள்ளவிவரங்கள் குறித்துத் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, வருமானவரித்துறையினர் தன்னிடம் முறைகேடாக நடக்கவில்லை என்று ஜடேஜா கூறியுள்ளார்.
வருமான வரிச் சோதனை நடந்த பிறகு முதல் முறையாக செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், வருமான வரித்துறையினர் நடந்து கொண்ட விதம் எனக்குமகிழ்ச்சியளித்தது. முறையாக நடந்து கொண்டார்கள்.
வருமான வரித்துறை அதிகாரிகள் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்கள். அதற்கு நான்பதிலளித்தேன் என்றார் ஜடேஜா.
இன்னும் நிகில் சோப்ரா, அஜய் சர்மா ஆகியோரது வீடுகளில் வருமான வரிச் சோதனைநடக்க வேண்டியுள்ளது. இதுவரை பத்து கிரிக்கெட் வீரர்களுடைய வங்கி லாக்கர்கள்திறந்து பார்க்கப்பட்டுள்ளது.