நடிகை ரோஜா வழக்கில் ஆக.7-ம் தேதி தீர்ப்பு
சென்னை:
நடிகை ரோஜாவுக்கு எதிராக சினிமா பைனான்சியர் குந்த் சந்த் போத்ராதொடுத்துள்ள வழக்கில் ஆகஸ்ட் 7-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சென்னைஉயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சினிமா எடுப்பதற்காக ரோஜாவின் சகோதரர் குமாரசாமி ரெட்டி என்னிடம் ரூ.20லட்சம் கடன் வாங்கினார். அதற்கு ரோஜா உத்தரவாதம் அளித்தார்.பணத்தையும்வட்டியையும் திருப்பித் தராததால் இப்போது கடன் தொகை ரூ.42லட்சமாகஅதிகரித்துவிட்டது.
சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரோஜாவுக்கு ஆகஸ்ட் 10-ம் தேதிவிருதுவழங்கப்படவுள்ளது. அவருக்கு வழங்கப்படும் விருதையும்,பணமுடிப்பையும்முடக்கி வைக்கவேண்டும் என்று குந்த் சந்த் போத்ரா தனது மனுவில்கூறியிருந்தார்.
இம் மனு நீதிபதி ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. ரோஜா தரப்பில்வழக்கறிஞர் ராமானுஜம் வாதாடினார்.
சினிமா எடுக்க ரோஜாவின் சகோதரர்தான் போத்ராவிடம் கடன் வாங்கினார்.ரோஜாகடன் வாங்கவில்லை. அதுவும் ரூ.15 லட்சம் தான் கடன் கொடுத்துள்ளார்.ஆனால்,ரூ.20 லட்சம் கடன் கொடுத்ததாக போத்ரா கூறுகிறார். மேலும்,அந்த கடன் பத்திரத்தில்ரோஜாவின் போலியான கையெழுத்தை அவர்போட்டுள்ளார்.
லத்திசார்ஜ் என்ற படத்தின் நெகடிவ் உரிமை போத்ராவிடம் உள்ளது. அப்படத்தைவெளியிட்டால் ரூ.50 லட்சம் வரை கிடைக்கும். அதன் மூலம் தனதுகடன்தொகையை போத்ரா வசூலித்துக் கொள்ளலாம்.
திறமையின் அடிப்படையில் கிடைத்த சிறந்த நடிகை விருதை முடக்கக் கோருவதுதவறு என்றார் ராமானுஜம். பைனான்சியர் போத்ரா சார்பில் வழக்கறிஞர் சிராஜுதீன்வாதாடினார்.
தான் கடன் வாங்கியது உண்மை என்று ரோஜா ஏற்கெனவேநீதிமன்றத்தில்கூறியுள்ளார். இவ் வழக்குத் தொடர்பாக அசையும் சொத்துக்களைவிற்கமாட்டேன் என்றும் உறுதி அளித்தார்.
இந்த கடன் தொகை வழக்கை அடுத்து ரோஜா நடித்த 13 படங்களின் சம்பளத்தைநீதிமன்றத்தில் கட்டும்படி ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. லத்திசார்ஜ்படத்தைவெளியிட செலவு அதிகமாகும். மேலும் இது டப்பிங் படம் என்பதால்அதிக விலைக்குப் போகாது.
மேலும், ரோஜாவுக்கு வழங்கப்படும் விருதை முடக்கவேண்டும் என்றுகூறவில்லை. தங்கப் பதக்கம் மற்றும் பணமுடிப்பை மட்டும் முடக்க வேண்டும்என்பதுதான் போத்ராவின் கோரிக்கை என்றார் சிராஜுதீன்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமமூர்தி, இவ் வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட்7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.