மைசூர் தடா கைதிகள் விடுதலை?
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வீரப்பனிடமிருந்து நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக, வீரப்பன் கூட்டாளிகள் என்று குற்றம் சாற்றப்பட்டு தடா சட்டத்தின் கீழ் மைசூர் ஜெயிலில்அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்கலாமா என்று கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் மைசூர் ஜெயிலில் வீரப்பன் வழக்குத் தொடர்பாக பல தமிழர்கள் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில்அடைக்கப்பட்டுள்ளனர். 1992 ம் ஆண்டு 93 தமிழர்களும், 93 ம் ஆண்டு 162 பேரும், 94 வது வருடம் 98 பேரும் தடா சட்டத்தின் கீழ் மைசூர் ஜெயிலில்அடைக்கப்பட்டனர்.
இவர்களில் 70 சதவீதம் பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் இன்னும் ஜெயிலிலேயே உள்ளனர். இப்போது ராஜ்குமாரைவீரப்பனிடமிருந்து மீட்பதற்காக, அவர்கள் அனைவரையும் விடுவிக்கலாமா என்பது குறித்து கர்நாடக அரசு ஆலோசித்தது.












Click it and Unblock the Notifications