கர்நாடகத் தமிழர்களுக்கு வைகோவும் பாதுகாப்பு கோருகிறார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமார்உள்பட 4 பேரையும் மீட்கும் முயற்சிகள் வெற்றிபெறும் என்று நம்புவதாக ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இது தொடர்பாக் அவர் வெளியிட்ட அறிக்கை:
கன்னட திரைப்பட உலகில் முடிசூடா மன்னனாக விளங்கி கன்னட மக்களின்நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர் ராஜ்குமார். அவர் கன்னட மாநில மக்களுக்குமட்டுமல்ல இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானவர், சொந்தமானவர்.
உயரிய இடத்தைப் பெற்றாலும் எளிமையான வாழ்க்கை வாழ்பவர். அவர் நலமுடன்வீடு திரும்பவேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பு மக்களின் விருப்பம்.
அதற்காக தமிழக, கர்நாடக அரசுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றி பெறும்என்று நம்புகிறேன்.
இக்கட்டான சூழ்திநிலையில் நிலைமையை உணர்ந்து அமைதி காக்கவேண்டியதுஅனைவருடைய பொறுப்பு. பெங்களூரில் சமீபத்தில் நடந்த வன்முறைகளும், அதில்ஒருவர் பலியாகியிருப்பதும் கண்டனத்துக்குரியது.
இச் சூழ்நிலையிலும், கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களும், தமிழகத்தில் உள்ளதமிழர்களும் நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடித்து வருவது மகிழ்ச்சிதரக்கூடியது.
கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க கர்நாடக அரசும்,போலீஸாரும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் வைகோ.