ரூ. 3 லட்சம் திருட்டு வி.சி.டி.க்கள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 1600 திருட்டு வி.சி.டி.க்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் பெ. காளிமுத்து, நிருபர்களிடம்கூறியதாவது:
சமீபத்தில் வெளியான குஷி, பெண்ணின் மனதைத் தொட்டு உள்ளிட்ட படங்கள்மற்றும் விரைவில் வெளியாக உள்ள இன்டிபென்டன்ஸ் டே உள்ளிட்ட தமிழ் சினிமாபடங்களின் திருட்டு வீடியோ சி.டி.க்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பாலசுப்பிரமணியம் தலைமையில்தனிப்படை அமைக்கப்பட்டு சென்னை மாநகரம் முழுவதும் திடீர் சோதனைமேற்கொள்ளப்பட்டது.
அப்போது, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் உள்ள ஒரு வீடியோ கேஸட் கடையில்1200 வீடியோ சி.டி.க்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக அந்த கடை உரிமையாளர் ராஜு கைது செய்யப்பட்டார்.
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஒரு வீடியோ கேஸட் கடையில் சோதனை நடத்தி 50திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர் ராஜன்கைதுசெய்யப்பட்டார்.
அதே பகுதியில் மற்றொரு கடையிலிருந்து 300 சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கடை உரிமையாளர் குமார் கைது செய்யப்பட்டார். புதுப்பேட்டையில் உள்ளஒருகடையிலிருந்து 50 சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர் ரகுகைதுசெய்யப்பட்டார்.
சென்னை மாநகரம் ழுவதும் இத்தகைய சோதனை மேற்கொள்ளப்படும். திருட்டுசி.டி.க்கள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்காளிமுத்து.