கபில் தேவ் பதவி காலியாகலாம்
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் கபில் தேவ் நியமிக்கப்படமாட்டார் என்று தெரிகிறது.
கனடாவின் டொரன்டோ நகரில் அடுத்த மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன்சஹாரா கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய அணியின் பயிற்சியாளராக கபில் தேவ் நியமிக்கப்படும் வாய்ப்புஇல்லை.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஏ.சி.முத்தையா கூறுகையில், கபில்தேவ் மீதான ஊழல் புகார்கள் குறித்து பெங்களூரில் ஆகஸ்ட் 19-ம் தேதிநடைபெறவுள்ள வாரியக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.
இந்திய அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளரை நியமிப்பது குறித்துஅவசரப்படாமல் முடிவெடுப்போம். சஹாரா கோப்பைத் தொடரில் கலந்து கொள்ளும்இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படலாம். இதுதொடர்பாகதற்போதைய பயிற்சியாளர் கபில் தேவிடம் பேசுவோம். இப்போது அவர் மிகப்பெரும் நெருக்கடியில் இருக்கிறார். எனவே பயிற்சியாளர் பொறுப்பை அவர்கையாள்வது சிரமமாக இருக்கலாம் என்றார் முத்தையா.
முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் கபில் தேவ் உள்பட சில வீரர்கள் மீதுமேட்ச் பிக்ஸிங் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக பல்முனை விசாரணை நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.