For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் துவங்கிய ஜெயலலிதாவின் "கல்தா மேளா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் உள்ள ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் சிலரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.

1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வுக்குக் கிடைத்த பெரும் தோல்வியை அடுத்து அ.தி.மு.க.வில் சிலபிரமுகர்களை நீக்கி அந்த இடத்தில் புதியவர்களை நியமிக்கும் பணியை ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார்.

மாவட்டச் செயலாளர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்களையும், கட்சியில் மிக முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களையும் திடீரென்றுநீக்கி அ.தி.மு.க.வினருக்கு மட்டுமல்ல மற்ற கட்சியினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தார் ஜெயலலிதா.

தொடர்ந்து அவ்வப்போது கட்சிக்குள் களையெடுத்து வரும் ஜெயலலிதா இப்போது ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் சிலரைநீக்கியுள்ளார்.

நாமக்கல் மாவட்ட அவைத் தலைவர் காளியப்பன், துணைத் தலைவர் ராமசாமி, இணைச் செயலாளர் தங்கவேல், துணைச் செயலாளர்ராஜசேகரன், திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் ரங்கசாமி, எருமைப்பட்டி ஒன்றியச் செயலாளர் சக்திவேல், நாமக்கல் நகரச் செயலாளர்அன்பழகன், குமாரபாளையம் செயலாளர்துரைசாமி ஆகியோரை ஜெயலலிதா நீக்கியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X