தமிழகத்தில் விரைவில் 600 மண்ணெண்ணெய் பங்க்குகள்
கோவை:
தமிழகத்தில் 600 மண்ணெண்ணெய் பங்க்குகள் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என கோவையில் தமிழக அமைச்சர் நேரு தெரிவித்தார்.
கோவையில் உள்ள தெலுங்குபாளையத்தில் புதிய மண்ணெண்ணெய் பங்க் திறப்புவிழாவில் கலந்து கொண்டு, தமிழ்நாடு பொதுவிநியோகத் துறை அமைச்சர் கே.என்நேரு பேசியதாவது:
தமிழ்நாட்டில் 600 மண்ணெண்ணெய் பங்க்குகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.இவற்றில் 225 பங்க்குகள் ஏற்கனவே, திறக்கப்பட்டு விட்டது. 130 பங்க்குகள்அமைக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவை அடுத்த 3 மாதங்களில் திறக்கப்படும்.
கோவையில் 50 பங்க்குகள் திறக்கப்படுகின்றன. இதற்கென அரசு 8 கோடி ரூபாய்செலவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதல்மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டின் மூலம் மலைவாழ் மக்கள் பயன்பெறுவர்.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி விநயோகம் 32சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்துள்ளது. மக்கள் மண்ணெண்ணெய் மற்றும்சர்க்கரையை மட்டுமே பொது விநியோகத் திட்டத்தில் அதிகமாக உபயோகிக்கின்றனர்என்றார் நேரு.
விழாவில் மாவட்ட கலெக்டர் சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.