குண்டுவெடிப்பு வழக்கில் அப்ரூவராகிறார் ஊம்பாபு
கோவை:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஊம்பாபு அப்ரூவராக மாறுகிறார். இதை உறுதிசெய்யும் வகையில் கோவை தனி நீதிமன்றத்தில் ஊம்பாபு தனியாக ஆஜர் படுத்தப்பட்டார்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 167 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகின்றனர். இந்த வழக்கில்கைதானவர்களில் பெரும்பாலானோர் அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான ஊம்பாபு அப்ரூவராகமறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இது தொடர்பாக சந்தேகமடைந்த உடன் கைதாகி சிறையில்இருந்தவர்கள், இவரைத் தாக்கியுள்ளனர். இந்த நிலையில், புதன்கிழமை தனி நீதிமன்றத்தில் ஊம்பாபு மட்டும்தனியாக ஆஜர்படுத்தப்பட்டார்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே ரியாஸ் என்பவர் அப்ரூவராக மாறியுள்ளார். ரியாஸ் மைசூரில்உள்ள ஒரு வெடி பொருள் நிறுவனத்தின் ஊழியராவார்.












Click it and Unblock the Notifications