கோத்தகிரியில் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
நீலகிரி:
கோத்தகிரியில் சிறு தேயிலை விவசாயிகள் பந்த் நடத்தினர். அமைதியான முறையில் இந்த பந்த் நடந்தது.
நீலகிரியில் சிறு தேயிலை விவசாயிகள் போராட்டம் ஓரளவு ஓய்ந்துள்ளது. இருந்தபோதிலும் சில இடங்களில்இன்னும் போராட்டம் ஓயவில்லை.
கோத்தகிரியில் சிறு தேயிலை விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டனர்.
ஆனால், போலீசார் அனுமதி தர மறுத்து விட்டனர். இதனையடுத்து பந்த் நடத்த விவசாயிகள் தீர்மானித்தனர்.எனவே, அனைத்து வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கலந்து பேசி பந்த் நடத்த முடிவுசெய்தனர்.
இந்த முடிவின்படி (ஆகஸ்ட் 10) பந்த் நடத்தப்பட்டது. அமைதியான முறையில் நடந்த இந்த பந்த்தின்போதுகடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் ஓடவில்லை.
ஆனால் அரசு பஸ்கள் இயங்கின. இதனால் கோத்தகிரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்புள்ளாகியிருந்தது.












Click it and Unblock the Notifications