ராஜ்குமார் கடத்தல்: சிபிஐ விசாரிக்க வேண்டும்
கோவை:
வீரப்பன் கடத்தல் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கூறினார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் பைனான்ஸ் அதிபர் விவேக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக இரண்டாவது தன்மை நீதிமன்றத்தில்விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக வந்த ஜான் பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். எங்களது கட்சி ஜாதி-மத உணர்வுகளின்அடிப்படையிலான கட்சிகளை எதிர்க்கிறது.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மாஞ்சோலை கொலை வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டார். இதில் சட்டம் தனது கடமையைச் செய்யும்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் ராஜ்குமாரைக் கடத்திச் சென்றுள்ளான். இதில் அரசியல் தொடர்புள்ளது. எனவே, ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஜான் பாண்டியன் கூறினார்.
நீதிமன்ற வளாகத்தில் இந்த பேட்டிக்கு பின்னர், நீதிமன்றத்தில் ஆஜரானார். விவேக் கொலை வழக்கு விசாரணையை நீதிபதி பூபாலன் செப்டம்பர்மாதம் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications