கோவை த.மு.மு.க. தொண்டர் கொலை: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக பகுதிச் செயலரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துகோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 97 ஆம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி நடந்த கொலை சம்பவத்தைகண்டித்து கோவையில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம், ஜனவரி 30ம் தேதி பந்த் நடத்த முடிவு செய்தது.

இதற்கான ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக இருந்தனர். துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். பந்த்அறிவிக்கப்பட்ட பின்னர் பிப்ரவரி 2ம் தேதி தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக பகுதிச் செயலர் சம்சுகனி மற்றும்பிரேம் நிசீர் ஆகியோர் ரத்தினபுரியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பிரேம் நசீர் டீ சாப்பிட கடைக்குச் சென்றுள்ளார். அப்போது சம்சுகனியைப் பார்த்த இந்துமுன்னணியைச் சேர்ந்த மில்கி (21), விக்னேஷ் என்ற கணேசன் (24), ராஜ்மோகன் (24), சோமன் (எ) சோமசுந்தரம்(20) ஆகியோர் சம்சுகனியை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

இதில் அதே இடத்தில் சம்சுகனி இறந்தார். இதனைக் கண்ட பிரேம் நசீர் அங்கு ஓடி வந்துள்ளார். அப்போதுவிக்னேஷ் அவரை வழிமறித்து, அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பிரேம் நசீர் காயத்துடன் தப்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சாயிபாபா போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகள் தப்பிச் செல்லஉதவியதாக சிவலிங்கம் (26), பாபு (24), ஆகியோரையும் சேர்த்து 6 பேர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் நீதிபதி பூபாலன்,குற்றம் நிரூபிக்கப்பட்ட மில்கி, சோமன், ராஜ்மோகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.விக்னேஷ் என்ற கணேசனுக்கு ஆயுள் தண்டனையுடன் மேலும் மூன்று ஆண்டுகள் கூடுதல் தண்டனை அளித்துதீர்ப்பளித்தார்.

சிவலிங்கம் மற்றும் பாபு ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+