கோவை போலீஸ்காரர் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
கோவை:
கோவை செல்வராஜ் கொலை வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவையில் டிராபிக் போலீஸ்காரர் செல்வராஜ் கடந்த 97ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி கத்தியால் குத்திகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர்.
செல்வராஜ் கொலை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகின்றனர். இவர்கள்அனைவரும் நீதிமன்றத்தில் வேற்று அனைவரும் ஆஜர் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் வக்கீல் வைத்துக் கொள்ள போதிய அவகாசம் கொடுத்து, நீதிபதி பூபாலன், வழக்கைஅடுத்த மாதம் (செப்டம்பர்) 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந் நிலையில் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு குண்டு வைத்தவழக்கில், அல்-உம்மா பொதுச் செயலராக இருந்த அன்சாரியை விசாரணை செய்ய, சி.பி.சி.ஐ.டி போலீசார்அவரை, போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.
இதற்கான மனுவை போலீசார் கோவை இரண்டாவது தன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக அன்சாரியை போலீசார் அழைத்துச் சென்றனர். 3 நாட்கள் அவரிடம்விசாரணை நடக்கும்.