கருணாநிதி-கிருஷ்ணா 3 மணி நேரம் தீவிர ஆலோசனை
சென்னை:
வீரப்பன் அனுப்பியுள்ள புதிய கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர்கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவும் சுமார் 3 மணி நேரம் தீவிரஆலோசனை நடத்தினர்.
கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்றுள்ள வீரப்பனைச் சந்தித்த நக்கீரன்கோபால், அவனது புதிய கோரிக்கைகளுடன் சென்னை திரும்பி முதல்வர்கருணாநிதியைச் சந்தித்தார்.
வீரப்பன் கோரிக்கைள் அடங்கிய வீடியோ கேஸட்டை முதல்வரிடம் நக்கீரன் கோபால்கொடுத்தார்.
கேஸட்டில் வீரப்பன் தெரிவித்துள்ள கோரிக்கைகள் குறித்து கருணாநிதியுடன்ஆலோசனை நடத்துவதற்காக கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா,வெள்ளிக்கிழமை மாலை 5.20-க்குச் சென்னை வந்தார்.
அவருடன் கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவும் மற்ற அரசுமற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் வந்தனர். பின்னர் கருணாநிதியும்,கிருஷ்ணாவும் தீவிர ஆலோசனை நடத்தினர்.
சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. இடையே, வீரப்பனின்கோரிக்கைகள் அடங்கிய விடியோ கேஸட்டை அவர்கள் பார்த்தனர்.ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் நிருபர்களைச் சந்தித்தனர்.












Click it and Unblock the Notifications