வங்கதேசத்தில் கடும் மழைக்கு 23 பேர் பலி
டாக்கா:
வங்கதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் இதுவரை 23 பேர் இறந்தனர். பலர் வீடு, வாசல்களை இழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் பாரித்பூர், மானிக்கஞ்ச் முன்ஷிக்கஞ்ச் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் ரயில்,போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. சுமார் 5,000 த்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். குடிசைப்பகுதி மக்கள் பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
ஷரியாத்பூர் டவுன் பகுதியில் உள்ள பல குடிசைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் 10, 000 க்கும் மேற்பட்டமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேச அரசு மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளது. இதுவரை வெள்ளத்தில் மூழ்கி 23 பேர் இறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. சாவு எண்ணிக்கைஇன்னும் உயரலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications