ரேகிங் செய்யப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சி
சென்னை:
கல்லூரியில் சீனியர்களால் ரேகிங் செய்யப்பட்ட 17 வயது மாணவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். மிகவும் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அவர் உயிருக்குப் போராடி வருகிறார்.
அவரை ரேகிங் செய்த சீனியர் மாணவியையும் 2 மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சி அருகே உள்ள கீழெம்பியில் உள்ளது கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இதில் படித்து வந்தவர்தீபா. இவரையும் இவரது தோழியையும் சீனியர் மாணவர்களும் மாணவிகளும் சூழ்ந்து பாடச் சொல்லியும் ஆடச்சொல்லியும் ரேகிங் செய்தனர்.
அவர்களை ஒரு வழியாய் சமாளித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய தீபா (17) உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் வெந்து போனது. பலத்த தீக்காயங்களுடன் அவர் சென்னைகீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அந்த மாணவியிடம் மாஜிஸ்திரேட்டும், போலீசாரும் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்தவாக்குமூலத்தின்பேரில், ஒரு மாணவி, 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications