ஹாலந்து நாட்டின் சுற்றுலா மைய மேயரான இந்திய மாணவி
டெல்லி:
ஹாலந்து நாட்டின் சுற்றுலா மையத்தின் மேயராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது மாணவிதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச அரசியல் குறித்து பயின்று வரும் சுமித் கவுர் அத்வால் தான் இந்த சாதனையாளர். முன்னதாக தனதுபள்ளியின் கவுன்சிலுக்கு அத்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரு பதவிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டஅன்னிய நாட்டைச் சேர்ந்த மிக இளம் வயது நபர் அத்வால் தான்.
ஹாலந்தின் தெற்குப் பகுதியில் உள்ள மதுரோடம் என்ற இந்த சுற்றுலா மையம் உலகப் புகழ் பெற்றது. இந்தமையத்தின் வரவு-செலவு முதல் இதற்கு விஜயம் செய்யும் பிற நாட்டு, உள்நாட்டு முக்கியஸ்தர்களை வரவேற்றுசுற்றிக் காட்டுவது வரை அனைத்தும் இந்த மேயரின் பொறுப்புத் தான்.
பஞ்சாபைச் சேர்ந்த தம்பதியின் மகளான அத்வால் ஹாலந்து நாட்டில் அரசியலிலும் தீவிர ஆர்வம் கொண்டுள்ளார்.ஜாஸ் மியூசிக், அத்தலெட்டிக், ஹிந்தி சினிமா எல்லாம் பிடிக்கும் என்கிறார். மும்பை படவுலகையும் கலக்கஆசையாம்.
அதே நேரம் மிகுந்த இறை நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். திங்கள்தோறும் சிவபெருமானுக்கு விரதம்இருக்கிறார், இந்து பண்டிகை, சுப தினங்களில் நோ என்.வி.
25 ஆண்டுகளுக்கு முன் ஹாலந்துக்கு வந்த இவரது தந்தை ஒரு ஹவுஸ் கீப்பிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இதுதவிர ஹாலந்து போலீசுக்கு மொழி பெயர்ப்பாளராகவும் இருக்கிறார்.
இவரது மகள் அத்வாலுக்கும் 5 மொழிகள் தெரியும் ஹிந்தி உள்பட.