குடிநீர் ஏரியில் மாடுகளுடன் மனிதர்களும் குளியல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்க போரூர் ஏரியில் உள்ள தண்ணீர்பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் பொது மக்கள் துணிை துவைப்பது,குளிப்பது, மாடுகளை குளிப்பாட்டுவது என்று சகலமும் நடந்து வருகின்றது.

இந்த தகவல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷீலாராணி சுங்கத்தின்கவனக்திற்கு சென்றது. இதைத் தொடர்ந்து ஷீலாராணி சுங்கத், அதிகாரிகளோடுபோரூர் ஏரிக்கு சென்றார்.

அப்பொழுது பலர் குளித்துக் கொண்டும், மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டும்இருந்தனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷீலாராணி சுங்கத், பொதுமக்களின் குடிநீருக்காகபயன்படுத்தப்படும் இந்த ஏரியில் குளித்தால் என்ன அர்த்தம். இங்கு யாரும்குளிக்கவோ, துணிவைக்கவோ கூடாது. ஏரியை பாதுகாப்பது நமது கடமை என்றுமக்களிடம் எடுத்துக் கூறினார்..

இதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், பெருநகர குடிநீர் வாரியஅதிகாரிகளுக்கும், பஞ்சாயத்து போர்டு தலைவருக்கும் இது குறித்து தகவல்கொடுத்தார்.

போரூர் ஏரியில் பொது மக்களோ, கால்நடைகளோ குளிக்கக் கூடாது. இதைமீறிகுளிப்பவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

முதல்கட்டமாக, நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு போரூர் ஏரியில் யாரும்குளிக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கும் விளம்பர போர்டுகள் வைக்க ஷீலாராணிசுங்கத் உத்தரவிட்டுள்ளார்.

இந்த எச்சரிக்கையை மீறி போரூர் ஏரியில் குளிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால் ஆறுமாதம் சிறைத்தண்டனையாைை,அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

இதுதவிர, தண்ணீர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால் ஒன்றரை ஆண்டு முதல் ஆறுஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஷீலாராணிசுங்கத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+