தீவிரவாதத்தை ஒடுக்க போர் ஒன்று தான் வழி என்கிறார் இலங்கையின் புதிய பிரதமர்
கொழும்பு:
ஸ்ரீலங்காவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே ராணுவநடவடிக்கைகள் மூலம் தீவிரவாதத்தை முறியடிப்போம் என்றார்.
ஸ்ரீலங்காவின் 16-வது பிரதமாராக ரத்னஸ்ரீ விக்கிரம சிங்கே பதவியேற்றார்.சிரிமாவோ பண்டார நாயகா(84) உடல் நலக் குறைவு காரணமாக பதவி விலகிய பிறகுவிக்கிரம சிங்கே பிரதமராக பதவிஏற்றுள்ளார்.
அவர் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்ற பின்பு பேசியதாவது:
ஜனநாயகமும், தீவிரவாதமும் இணைந்து இருக்க முடியாது. சட்டம், நீதி, நியாயத்துக்குதீவிரவாதத்தில் இடமில்லை. எனவே போர் ஒன்றுதான் தீவிரவாதத்தைஒடுக்குவதற்கான வழியாகும். சிறுபான்மையினருக்கு ஏதாவது குறைகள் இருந்தால்அதை தீர்த்துவைப்பதற்கான வழிமுறைகள் கண்டுபிடிக்கப்படும் .
நாடு தற்போது தீவிரவாதத்தின் காரணமாக சோதனையான கால கட்டத்தில்உள்ளது.எதிர்க்கட்சிகள் அரசுடன் தீவிரவாத்தை ஒடுக்க ஒத்துழைக்க வேண்டும்என்றார்.