ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கிறது அசோக் லேலண்ட்
டெல்லி:
அசோக் லேலண்ட் நிறுவனம் தனது வாகன என்ஜின் தயாரிப்புப் பிரிவை தனி நிறுவனமாக்கத் திட்டமிட்டுள்ளது.
இத்தாலியின் இவிக்கோ கார் நிறுவனமும் அசோக் லேலண்டும் இந்த புதிய என்ஜின் தயாரிப்பு நிறுவனத்தில்முதலீடு செய்ய உள்ளன. இது இவிக்கோவின் சர்வதே என்ஜின் தயாரிப்புப் பிரிவாக இயங்கும்.
இப்போது இரு நிறுவனங்களும் இணைந்து என்ஜின்களைத் தயாரித்து வருகின்றன. ஆனால், இவை அசோக்லேலண்ட் வாகனங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இனி புதிய நிறுவனம் தயாரிக்கும் என்ஜின்கள் பிறவாகன தயாரிப்பாளர்களுக்கும் விற்கப்படும்.
இது தவிர 8 முதல் 10 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்காக ஊழியர்களின் எண்ணிக்கையையும் கொஞ்சம்கொஞ்சமாகக் குறைதக்கவும் அசோக் லேலண்ட் திட்டமிட்டுள்ளது. இதற்காக விருப்ப ஓய்வூதியத் திட்டம்கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வு பெற 200 தொழிலாளர்கள் முன் வந்துள்ளனர் என்றார்.