For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிபந்தனைகளை நிறைவேற்ற அரசுகளுக்கு வீரப்பன் 8 நாள் கெடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், தனது கோரிக்கைகளை வரும் 19ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும்என வீரப்பன் கெடு விதித்துள்ளார்.

காட்டில் அவரைச் சந்தித்த நக்கீரன் கோபாலிடம் இந்தத் தகவலை வீரப்பன் கூறி அனுப்பியுள்ளார்.

வீரப்பனையும், ராஜ்குமாரையும் தான் சந்தித்துப் பேசியதை வீடியோவிலும் கோபால் படம் பிடித்துக்கொண்டுவந்துள்ளார்.

அதில் பேசும் ராஜ்குமார், தான் நலமுடன் இருப்பதாகவும், யாரும் எந்தவிதமான வன்முறைச் செயல்களிலும்ஈடுபடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

காட்டுப் பகுதியிலேயே கோபாலும், ராஜ்குமாரும் குளித்துவிட்டு தலை துவட்டிக் கொள்வதும், அந்த வனப்பகுதியும், துப்பாக்கியுடன் கோபாலை வரவேற்கும் வீரப்பனும், வீரப்பன் சாமி கும்பிடுவதும் வீடியோவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நிருபர்களை சந்தித்த நக்கீரன் கோபால், இரு மாநில அரசுகளும் தனக்குக் கொடுத்த பணியைதான் முறையாக செய்து முடித்துள்ளாகவும், ராஜ்குமாரை வீரப்பன் கட்டாயம் விடுவித்துவிடுவான் என்றும்கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X