விரைவில் 3 புதிய மாநிலங்கள்: நாடாளுமன்றம் ஒப்புதல்
டெல்லி:
பிகார் மாநிலத்தைப் பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில்வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பிகாரின் தெற்குப் பகுதியில் உள்ள மாவட்டங்களை அடக்கிய ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கும்பணிகள் முடுக்கிவிடப்படும்.
ராஜ்யசபையில் குரல் ஓட்டு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 2 நாட்களாக இந்த மசோதா மீதுவிவாதம் நடந்து வந்தது. புதிய ஜார்க்கண்ட் மாநிலத்தில் 18 மாவட்டங்கள் இருக்கும்.
மசோதா நிறைவேற்றப்பட்ட பின் பேசிய உள்துறை அமைச்சர் அத்வானி, நவம்பர் 1ம் தேதி பிகாரைப் பிரித்துஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசத்தைப் பிரித்து உத்தராஞ்சல், மத்தியப் பிரதேசத்தைப் பிரித்து சட்டீஸ்கர் ஆகியமாநிலங்கள் உருவாக்கப்பட்டுவிடும் என்றார். இந்த 3 மாநிலங்களையும் உருவாக்க மசோதாக்கள்நிறைவேற்றப்பட்டுவிட்டன.
ஜார்க்கண்ட் மாநில மசோதா தான் இறுதியாக நிறைவேறியது. மற்ற இரு மாநிலங்களை உருவாக்குவதற்கானமசோதாக்களும் முன்பே நிறைவேறிவிட்டன.
இது இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என்றார். புதிய மாநிலங்களின் பொருளாதாரவளர்ச்சிக்கும், தடுமாறிக் கொண்டிருக்கும் பிகாரின் பொருளாதார வளர்ச்சிக்கும் மத்திய அரசு உதவும் என்றார்.












Click it and Unblock the Notifications