பாகிஸ்தான் செல்கிறீர்களா? ஜாக்கிரதை: அமரிக்கர்களுக்கு அரசு எச்சரிக்கை
வாஷிங்டன்:
பாகிஸ்தானுக்குச் செல்லும் அமெரிக்கர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து நன்றாக யோசித்துப் பார்த்துவிட்டு பின்னர்பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த எச்சரிக்கையை அமெரிக்க அரசே வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம்வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒசாமா பின் லேடனின் தலைமையிலான ஆப்கான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில்உள்ள அமெரிக்கர்கள், அமெரிக்க சொத்துக்களைத் தாக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துளளது.
இதனால், பாகிஸ்தானில் வசிக்கும் அல்லது பாகிஸ்தான் வழியாக பயணம் செய்யும் அமெரிக்கர்கள் தங்களைபத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மிக விரைவிலேயே ஆப்கன் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தக் கூடும். உலகம் முழுவதுமேதீவிரவாதத்தைப் பரப்பி வரும் பின் லேடனுக்கு பாகிஸ்தானில் நல்ல ஆதரவு உள்ளது. இதனால், பாகிஸ்தானில்உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளும் ஊழியர்களும் கூட ஆப்கன் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குமேற்கொள்ள இருந்த பயணத்தை ஒத்தி வைத்துவிட்டனர்.
மற்ற அமெரிக்கர்களும் இது போன்ற பயணத்தை ஒத்தி வைத்துவிடுவது நல்லது.
அதே போல இந்தியாவுடன் பாகிஸ்தான் பிரச்சனை செய்யாமல் இருந்தால் அதற்கு பல பாகிஸ்தான் தீவிரவாதஅமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இந்தியாவுடன் பிரச்சனை இல்லாத நேரங்களில் எல்லாம்அமெரிக்கர்களை இலக்காக வைத்து தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர்.
குறிப்பாக ஹர்கத்-உல்-முஜாஹீதீன் என்ற அமைப்பு சமீபத்தில் எந்த அமெரிக்க தூதரக அதிகாரியும் காஷ்மீருக்குள்நுழையக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்பு ஹர்கத்-உல்-அன்சர் என்று அழைக்கப்பட்ட இந்தஅமைப்பு பாகிஸாதானிலும் இந்தியாவிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அமெரிக்க வெளியுறவுத்துறையின் எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.