சபாஷ் .. சரியான போட்டி!
கரூர்:
ஆட்டோ டிரைவரின் கள்ளக் காதலிகள் இருவர், நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டைபோட்டனர்.
கரூர் நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தஆட்டோ டிரைவர் கணேசனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.
இந் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த முனியம்மாளுடன் கணேசன் தொடர்புவைத்திருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று முனியம்மாளுடன் கணேசன்உல்லாசமாக இருந்ததை வீரமணி பார்த்தார்.
ஆத்திரமடைந்த வீரமணி, முனியம்மாளிடம் சென்று எப்படி எனது கள்ளக்காதலனுடன்நீ தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டுத் தகராறு செய்துள்ளார்.
இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி இருவரும் நடு ரோட்டில் கட்டிப்புரண்டுசண்டை போட்டனர். வீரமணிக்கு ஆதரவாக அவரது மகள் நதியாவும்,முனியம்மாளுக்கு ஆதரவாக அவரது தாயும் வந்தனர்.
தாயும் மகளும் சண்டைக்கு வந்ததால் ஆத்திரமடைந்த முனியம்மாள் வீட்டுக்குள்சென்று பிளேடு எடுத்து வந்து வீரமணியையும், நதியாவையும் கீறினார். காயமடைந்தஇருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வீரமணி கொடுத்த புகாரில் கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications