கிரிக்கெட் வாரிய போக்கு சரியில்லை என்கிறார் விளையாட்டு அமைச்சர்
டெல்லி:
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான விசாரணைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம்முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்தின்ட்சா கூறியுள்ளார்.
டெல்லியில் இதுகுறித்து தின்ட்சா அளித்த பேட்டியில், கிரிக்கெட் வாரியத்தின் போக்குகுறித்து எனக்கு அதிருப்தி உள்ளது. மேட்ச் பிக்ஸிங் தொடர்பான எங்களதுகேள்விகளுக்கு அவர்கள் சரியாகப் பதில் தர மறுக்கிறார்கள். அவர்களது போக்குசரியில்லை.
எதைக் கேட்டாலும் வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள். சமீபத்தில் என்னைச்சந்தித்தபோது விளையாட்டு அமைச்சகத்துடன் ஒத்துழைப்பதாக கூறினார். ஆனால்நடைமுறையில் அது தலைகீழாக உள்ளது.
சஹாரா கோப்பைப் போட்டியில் மூன்றாவதாக ஒரு நாடு சேர்க்கப்பட்டாலும் கூட,பாகிஸ்தானுடன், இந்தியா விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. பாகிஸ்தானுடன்இந்தியாவின் உறவு எப்படியுள்ளேதா அதைப் பொறுத்தே கிரிக்கெட் உறவும் இருக்கமுடியும்.
கிரிக்கெட் வாரியத்திற்கும், எனது அமைச்சகத்திற்கும் இடையே மோதல் இருப்பதைநான் மறுக்கவில்லை. ஆனால் சுயாட்சி அமைப்பான வாரியத்தின் செயல்பாடுகளில்தலையிடுவது எனது நோக்கமல்ல. ஆனால் ஊழல் என்று வரும்போது அதைப்பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி எம்.பிக்களும் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாககடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர் என்றார் தின்ட்சா.
யு.என்.ஐ.