நாளை காலை காடு செல்கிறார் கோபால்
சென்னை:
நக்கீரன் கோபால் வியாழக்கிழமையன்று இரண்டாவது முறையாக வீரப்பனை சந்திக்ககாட்டுக்குள் செல்கிறார்.
கடைசியாக கிடைத்த தகவல் படி நக்கீரன் கோபால் வியாழக்கிழமை காலை சேலம்செல்கிறார்.
சேலத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு அந்தியூர் காட்டுக்குள் செல்கிறார்.அங்கிருந்து வீரப்பனின் இருப்பிடத்திற்கு செல்கிறார் என்று கோட்டை வட்டாரம்புதன்கிழமை மாலை தெரிவித்தது,
ராஜ்குமாரை மீட்க இரண்டாவது முறையாக தூது செல்லும் அரசு தூதர் கோபால்,இம்முறை வீரப்பன் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதற்கான ஆதாரங்கள்,தஸ்தாவேஜுகளுடன் செல்கிறார்.
அந்தியூர் காட்டில் அவர் நுழைந்தது, வீரப்பன் ஆட்கள் வந்து அவரை அழைத்துச்செல்ல வேண்டும். போலீஸ் நடமாட்டம் எல்லாவற்றையும் கண்காணித்து, மிகவும்எச்சரிக்கையுடன்தான் வீரப்பன் ஆட்கள் வெளியே வருவார்கள்.
எனவே, 16-ம் தேதி அவர் காட்டுக்குள் நுழைந்தாலும் வீரப்பனை சந்திக்க ஓரிருநாட்கள் ஆகிவிடலாம் என்றும் தமிழக அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
வீரப்பனின் பெரும்பான்மையான கோரிக்கைகளை இரு மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதால், அநேகமாக இம்முறை ராஜ்குமார் உள்ளிட்ட நால்வரை மீட்டுக்கொண்டு தான் நக்கீரன் கோபால் திரும்புவார் என்றும் தமிழக அரசு வட்டாரம்நம்பிக்கை தெரிவித்தது.