புலிகள் முகாமை குண்டு வீசித் தகர்த்தது இலங்கை விமானப் படை
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் இரண்டு முகாம்களை இலங்கை விமானப் படை வீரர்கள்குண்டுவீசித் தகர்த்தனர்.
இலங்கை ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஆர்யா ரூபசிங்கே இதுபற்றிக்கூறியதாவது:
விடுதலைப்புலிகள் அப்பாவித் தமிழ் மக்களை கொரில்லாத் தாக்குதல்களில்வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துகின்றனர்.
வடக்கு யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் இரண்டு முகாம்களை இலங்கைராணுவத்தின் மிக் - 27 ரக போர் விமானங்கள் குண்டு வீசி தகர்த்தன. இப் பகுதியில்விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடந்தது. அதில் நான்கு விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர்.
மடுவில் செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் 40 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர். சாவகச்சேரி பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவிடுதலைப்புலி கொல்லப்பட்டார்.
தற்போது யாழ்ப்பாணம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.புறநகர்ப் பகுதிகள்மட்டுமே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.
விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினால் அதை தடுத்துத் தாக்குதல் நடத்த நவீனஆயுதங்களுடன் இலங்கை ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்றார்.