512 சிறுவர், சிறுமியர்களுக்கு முற்றிய நிலையில் எய்ட்ஸ்
டெல்லி:
இந்தியாவில் 512 சிறுவர், சிறுமியருக்கு முற்றிய நிலையில் எய்ட்ஸ் நோய் உள்ளதாகநாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ராஜ்யசபாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் ரீட்டாவர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் எழுத்து மூலமாக ரீட்டா அளித்த பதிலில், எச்.ஐ.வி வைரஸால்பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வருகிறது. ஆனால்முழுமையான எய்ட்சால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரைப் பற்றிய முழு விவரம் இல்லைஎன்று தெரிவித்தார்.
எச்.ஐ.வி. வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களிடமிருந்து அவர்களதுகுழந்தைகளுக்கும் எய்ட்ஸ் பரவுகிறது. இதுவே அதிக அளவில் குழந்தைகளுக்குஎய்ட்ஸ்வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம்.
மேலும், சிறுவர், சிறுமியரை தவறான பாலியில் உறவுகளில் அதிகம் ஈடுபடுத்துவதும்எச்.ஐ.வி வைரஸ் பரவுவதற்குக் காரணம் என்றும் அமைச்சர் கூறினார்.
யு.என்.ஐ.