பெங்களூரில் கூடுகிறது கிரிக்கெட் வாரிய செயற்கமிட்டி
பெங்களூர்:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற் கமிட்டி கூட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகளை அடுத்து கிரிக்கெட் ஆட்டத்துக்கான புதிய நெறிமுறைகளை இறுதி செய்வது குறித்தும், கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்துக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல அம்பயர்கள், அணியின் அதிகாரிகள், நிர்வாகிகள் ஆகியவர்களுக்கான புதிய நெறிமுறைகளை மூன்று பேர் கொண்டகமிட்டி உருவாக்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் லண்டனில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த புதியநெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதேபோல், விளையாடிக் கொண்டிருந்தபோதோ அல்லது விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகோ கிரிக்கெட் வீரர்களோ, அம்பயர்களோ, அணியின்அதிகாரிகளோ மேட்ச் பிக்ஸிங் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதற்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்துக்கு அதிகாரம் வழங்குவது குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இக் கூட்டத்துக்கு முன்பாக வாரியத்தின் நிதி கமிட்டிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications