இந்திய ஹாக்கி வீரர்களுக்கு "கிராஃபைட் மட்டைகள்"
டெல்லி:
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் அடுத்து மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட உள்ள இந்திய ஹாக்கி அணியினருக்கு கிராஃபைட்டால்தயாரிக்கப்பட்ட மட்டைகள் வழங்கப்படவுள்ளன.
இதுவரை பயன்படுத்தி வந்த மரத்தாலான மட்டைகளுக்குப் பதிலாக இந்த கிராஃபைட் மட்டைகள் வழங்கப்படவுள்ளன. இந்திய அணி வீரர்களுக்குவழங்கப்படவுள்ள பி கிரேடு மட்டைகளின் விலை ரூ. 6,500 ஆகும். ஏ கிரேடு மட்டைகளின் விலை ரூ. 8,000.
முதன்முறையாக இந்திய அணியினர் பயன்படுத்தப்படவுள்ள இந்த கிராஃபைட் மட்டைகள் பாகிஸ்தானில் சியால்கோட் நகரில் தயாரிக்கப்படுகின்றன.
மரத்தாலான மட்டைகள் இரண்டு அல்லது மூன்று பாகங்களைக் கொண்டது. ஆனால், கிராஃபைட் மட்டைகள் ஒரே பாகமாக இருக்கும். கருப்புக்கலரில் இந்த மட்டைகள் உள்ளன.
பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் முகேஷ் குமார், தன்ராஜ் பிள்ளை, ரமன்தீப் சிங், முகம்மது ரியாஸ், பல்ஜீத் சிங் செய்னி ஆகியோர்கிராஃபைட் மட்டைகளைப் பயன்படுத்தினர்.
கிராஃபைட் மட்டைகளுடன் விளையாடியது குறித்து இந்திய அணி வீரர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மரத்தாலான மட்டையை விட இந்த கிராஃபைட் மட்டை நன்றாக உள்ளது என்று லெப்ட் விங்கர்" முகேஷ் குமார் தெரிவித்தார். பந்தை நன்கு அடித்துவிளையாட இந்த மட்டை உதவுகிறது. மேலும், இந்த மட்டை அதிக பளுவானதும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், இந்த கிராஃபைட் மட்டையால் உடலில் அடிபட நேர்ந்தால் அது மோசமாக இருக்கும் என்றார் முகம்மது ரியாஸ். இந்தக் குறைபாட்டைத்தவிர கிராஃபைட் மட்டைகள் அனைத்து விதத்திலும் சிறப்பானதாகவே கருதப்படுகிறது.
பயிற்சி முகாமில் இதைப் பயன்படுத்திய 5 வீரர்களின் கருத்துகளை அடுத்து இந்திய அணியினர் அனைவருக்கும் கிராஃபைட் மட்டைகளை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொள்ளச் செல்லும் இந்திய அணியினர் மரத்தாலான மட்டைகளையும், கிராஃபைட் மட்டைகளையும் உடன் எடுத்துச்செல்வர். பயிற்சி ஆட்டங்களில் மரத்தாலான மட்டைகளை அவர்கள் பயன்படுத்துவர்.
மரத்தாலான மட்டைகளை விட இந்த கிராஃபைட் மட்டைகள் நீண்ட நாட்களுக்கு வரும். ஒழுங்காகப் பராமரித்தால் சுமார் 5 ஆண்டுகளுக்கு இந்தகிராஃபைட் மட்டைகளைப் பயன்படுத்தலாம் என்றார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகேஷ் குமார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications