குமாரமங்கலம் நலம் பெற கோவில்களில் பிரார்த்தனை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் நலம் பெற்று வருவதற்காக திருச்சிகோவில்களில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
திருச்சி எம்.பி. ரங்கராஜன் குமாரமங்கலம்.(48). இவர் மத்திய அமைச்சராகவும்உள்ளார். விஷக்காய்ச்சலின் காரணமாக டெல்லியிலுள்ள இந்திய மருத்துவக் கழகமருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது கோமாவில்(சுயநினைவிழந்த நிலையில்) உள்ளார். அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகஉள்ளது.
குமாரமங்கலம் விரைவில் குணமடைந்து நலம் பெற திருச்சி நகரில் உள்ள இந்துக்கோவில்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் புதன்கிழமைபிரார்த்தனை நடந்தது.












Click it and Unblock the Notifications