காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் சிறுபான்மை சமூக குடும்பத்தைச்சேர்ந்த ஆறு பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் ஆறு பேர்காயமடைந்தனர்.
வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் சங்கிரி கிராமத்தில் இந்தக் கோரச் சம்பவம்நடந்தது. திடீரென வந்த தீவிரவாதிகள் கும்பல் வீட்டுக்குள் புகுந்துஅங்கிருந்தவர்களைச் சரமாரியாகச் சுட்டது. இதில் ஆறு பேர் இறந்தனர். 6 பேர்காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் கிராமத்தில், ஊரடங்கு உத்தரவுஅமல்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்த ஆறு பேரும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications