For Daily Alerts
Just In
திருச்சியில் ரூ. 15 லட்சம் கடிகாரங்கள் திருட்டு
திருச்சி:
திருச்சியில் உள்ள கடிகாரக் கடையில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ. 15லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் மற்றும் ரூ. 25,000 பணத்தைத் திருடிக் கொண்டுதப்பினர்.
திருச்சியின் மையப் பகுதியில் உள்ள மெயின்கார்ட் கேட் என்ற இடத்தில் இந்தகொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள டைட்டன் கடிகார கடை ஒன்றினபூட்டை உடைத்து சில கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். பின்னர் உளளே இருந்தகைக்கடிகாரங்களை திருடிக் கொண்டு தப்பினர்.
தகவல் அறிந்த போலீஸார் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துசோதனை மேற்கொண்டனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, August 18, 2000, 5:30 [IST]