அயோத்தி விவகாரம்: துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள தயார் - வி.எச்.பி.

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியின்போது, தேசிய முன்னணி மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும்தயாராக உள்ளோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பின் துணைத் தலைவர் ஆச்சார்ய கிரிராஜ்கிஷோர் கூறினார்.

கோயம்புத்தூரில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:

நாங்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முனைந்திருப்பதால் எங்கள் அமைப்பைத் தடை செய்ய வேண்டும்என்று பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் இந்த அரசியல் கட்சிகளைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. ராமர் கோவில் கட்டுவதுஒன்றே எங்களது லட்சியம்.

இதற்காக நாங்கள் எந்தப் பிரச்சனையையும் எதிர் கொள்ளத் தயாராக உள்ளோம்.துப்பாக்கிக் குண்டுகளைக்கூடஎதிர்கொள்வதற்குத் தயாராகவே உள்ளோம்.

முன்பு ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவளித்த பிரதமர் வாஜ்பாயும் உள்துறை அமைச்சர் அத்வானியும் தற்போதுஅரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முன்வர மறுக்கிறார்கள்.

அத்வானியாவது முன்பு ரத யாத்திரையை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். ஆனால் அவரும் இப்போதுஅரசியல் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விட்டார்.

இவ்விஷயத்தில் மத்தியில் பாஜக அரசு கவிழ்ந்தாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. அதைச்சமாளிக்க வேண்டியது அவர்கள் வேலை என்றார் கிஷோர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+