பயிற்சியாளர் பதவி முடிந்ததும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - கபில் தேவ் அறிவிப்பு
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் பதவிக் காலம் முடிந்தவுடன் சர்வதேசகிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறுவேன் என்று கபில் தேவ் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்தியாவுக்கு உலகக் கோப்பையைப்பெற்றுத் தந்தவருமான கபில் தேவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகளைவீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.
அந்த சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் வால்ஷ் சமீபத்தில்தான்முறியடித்தார்.
தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் கபில் தேவ் உள்ளார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட்வீரர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோர் மீது மேட்ச்பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
கபில் தேவ் மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. குற்றச்சாட்டுகள்தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந் நிலையில், இக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் சமீபத்தில் இந்தியா முழுவதும்உள்ள சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
கபில் தேவின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.இதையடுத்து அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பலர்கோரினர்.
ஆனால், தன் மீது எந்த குற்றமும் இல்லை என்ற கபில்தேவ், பயிற்சியாளர்பதவியிலிருந்து விலகமாட்டேன் என்று அறிவித்தார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசியபோதும் அவர் இதைத் திட்டவட்டமாகத்தெரிவித்தார். நான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஒரு போதும் ஈடுபடவில்லை.
யாருக்கும் பயந்து ஓடி ஒளியவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக் காலம் முடிந்தவுடன்கிரிக்கெட்டிலிருந்து முழுமையா ஓய்வு பெறுவேன். அதுவரை யார் நிர்பந்தத்தின்பேரிலும் நான் பதவி விலகமாட்டேன்.
மேலும் அது பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான் முடிவுசெய்யவேண்டும் என்றார் கபில்தேவ்.












Click it and Unblock the Notifications