சர்க்கரை ஆலை அலுவலர்களுக்கு ஊதிய உ.யர்வு
சென்னை:
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் அலுவலர்களுக்கு ஊதியஉயர்வு மற்றும் சலுகைகள் வழங்க தமிழக முதல்வர் கருணாதிதி ஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு சனிக் கிழமை வெளியிட்ட அறிக்கை:
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் மத்திய அரசின் சம்பள வாரியசட்டத்தின் கீழ் ஒப்பந்தம் ஏற்பட்டு, சம்பள நிர்ணயம் செய்யப்பட்ட கீழ் நிலைஅலுவலர்களைத் தவிர, முந்தைய பொதுத் தொகுப்பில் பணிபுரிந்த அலுவலர்களுக்குஊதிய விகிதங்களைத் திருத்தி அமைப்பது குறித்து ஆராய்ந்து, பரிந்துரைகள் வழங்கிடசர்க்கரைத்துறை இணை ஆணையர் தலைமையில் 16.8.2000 அன்று சர்க்கரைத்துறைஆணையரிடம் அளித்தது.
சர்க்கரைத் துறை ஆணையரிடமிருந்து அரசுக்குக் கிடைத்த பரிந்துரைகளை பரிசீலனைசெய்து, முந்தைய பொதுத் தொகுப்பில் பணிபுரிந்த கூட்டுறவு மற்றும் பொதுத்துறைசர்க்கரை ஆலைகளின் அலுவலர்கள் பெற்று வரும் பழைய ஊதிய விகிதங்களுக்குஇணையாக அரசின் புதிய ஊதிய விகிதங்களை வழங்கிட 1.1.1996 முதல் ஊதியவிகிதங்களைத் திருத்தியமைத்தும், 1.1.1999 முதல் பணப்பயன் கிட்டும் வகையிலும்முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் இவர்களுக்குஅகவிலைப்படி அளிக்கலாம் என்றும், ஊதிய விகிதங்களைத் திருத்தியமைப்பதன்மூலம் அலுவலர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை மூன்றுதவணைகளில் வழங்கலாம் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊதிய விகிதங்களைத் திருத்தியமைப்பதன் மூலம் ஆண்டுக்கு ஒரு கோடியே 80லட்ச ரூபாய் கூடுதல் செலவாகும். இதன் மூலம் 832 அலுவலர்கள் பயனடைவார்கள்.












Click it and Unblock the Notifications